2025 ஜூன் 18, புதன்கிழமை

தொழிற்சங்க நடவடிக்கையால் 500 மில்லியன் ரூபாய் நட்டம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

துறைமுக பணியாளர்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையால், துறைமுக அதிகாரசபைக்கு 500 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா துறைமுக அதிகாரசபையின் உப தலைவர் டபிள்யு. எஸ். வீரமன் தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக நாளாந்தம் துறைமுகத்துக்கு 120 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்து வந்த நிலையில், கடந்த 3 நாள்களாக இந்த வருமானம் இழக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வேறு தாமதக் கட்டணங்களை செலுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளின் போது, மக்கள் முகம் கொடுக்க வேண்டிய சகல அசௌகரியங்களையும் நீக்கி, அத்தனை நட்டங்களையும் துறைமுக அதிகாரசபை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .