2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

’தொழுவதற்கான திசையாக மெதமுலனவை மாற்றிவிடுவர்’

Editorial   / 2020 ஜூலை 18 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை, மலிவான விலைகளுக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை "முஸ்லிம் மொட்டுக்கள்" ஆரம்பித்துள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார். 

“ராஜபக்‌ஷர்களின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட அக்கிரமங்கள், அழிவுகள், அடக்குமுறைகளுக்குப் பரிகாரமாக அரிசி, சட்டி, பானை, தையல் மெஷின்களை வழங்கும் இவர்களின் புதிய போக்குகள், "ஈமான்" மற்றும் "கலிமாவை" அடகு வைப்பதற்கான  முயற்சிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முஸ்லிம்களை இவ்வாறு இழிவாக வழிநடத்தி, ராஜபக்‌ஷர்களின் விசுவாசிகளாவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் எனவும், இந்த நிலைமை நீடித்தால் முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்கான திசையாக மெதமுலான அமைந்திருக்கும் பக்கத்தை மாற்றிவிடுவர் என்றும் சாடினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .