2025 ஜூன் 18, புதன்கிழமை

‘தோட்டத் தொழிலாளியின் மகன் நாடாளுமன்றம் செல்வது உறுதி’

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

தான் குடியிருக்கும் லயத்தின் இலக்கமும் பத்து, தனது விருப்பு இலக்கமும் பத்து எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எம்.சந்திரகுமார், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தோட்டத் தொழிலாளியின் மகனான தான் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாவது உறுதி எனவும் தெரிவித்தார்.

கொழும்பு வாழ் மலையக இளைஞர்களுடனான சந்திப்பு ஒன்றை தமிழ் முற்போக்குக் கூட்டணி நேற்று(31) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இரத்தினபுரியில் உள்ள 78 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களும், 22 ஆயிரம் இஸ்லாமியர்களும், முற்போக்குச் சிந்தனைக்கொண்ட சிங்களவர்களும் தனக்கு வாக்களிக்க இம்முறை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .