2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

நாடாளுடன்றத்தில் தொண்டமான் குடும்பத்தினர்

Editorial   / 2020 செப்டெம்பர் 11 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணையை, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இது தொடர்பில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வைப் பார்வையிடுவதற்காக, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தினர், தற்போது நாடாளுமன்றத்துக்கு வருகைத் தந்துள்ளனர். இதன்படி, சபாநாயகர் கலரியில் ஆறுமுகன் தொண்டமானின் மனைவி அமர்ந்து, நாடாளுமன்ற அமர்வுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்.

அதுபோல, தொண்டமானின் மருமகனான செந்தில் தொண்டமான், மகள் விஜயலக்‌ஷ்மி தொண்டமான், கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோரும் கலரியில் இருந்தவாறு, நாடாளுமன்ற அமர்வுகளைப் பார்வையிட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .