Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, வெலிக்கட சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொக்கா மல்லி எனப்படும் பிரேமலால் ஜயசேகர, 20 திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற முதல் அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதியைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைகள் அதிகாரிகளிடம் விடுக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை, சிறைச்சாலைகள் தலைமையகத்தால், நீதிமன்ற அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நீதிமன்ற அமைச்சின் அனுமதிக்கு அமைய, பிரேமலால் 20ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு வருகைத் தரலாம் என்றும் நம்பப்படுகின்றது.
நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரேமலால் ஜயசேகர, 142,037 வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .