2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'நாட்டில் அறிவியல் பூர்வமான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை'

Editorial   / 2019 ஜூன் 23 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டில் அறிவியல்பூர்வமான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் ஹம்பாந்தோட்டையாகும்  என மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

 அரசியல் இலாபங்களுக்காக துறைமுகம், விமான நிலையம், ​நெடுஞ்சாலைகளை அமைத்துச் சென்றது கடந்த அரசாங்கம். அதேப்போல் இந்த அரசாங்கமும் அதிக முதலீடு​களை செய்து அபிவிருத்தி செய்தது குறித்த பிரதேசத்துக்கே என்றாலும் அங்கு தான் மந்தபோசனையால் குழந்தை உயிரிழக்கின்றது.

கிரிபத்கொடையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தின் அதிக முதலீடுகள் இடம்பெறுவது ஹம்பாந்தோட்டையிலேயே அதிக முதலீடுகள் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .