Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 27 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வென்னப்புவ பிரதேச சபைத் தவிசாளர் பயங்கரவாதத்துக்கு எதிராகச் செயற்படுவதற்குப் பதிலாக, இனவாத போக்கில் செயற்பட்டுள்ளதன் மூலம், இலங்கை பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டத்தை, சர்வதேசத்தின் முன் குறைத்து மதிப்பிடச் செய்துள்ளதாக, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கன இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.
தங்கொட்டுவ வாராந்தச் சந்தை விவகாரம் தொடர்பில் அவரிடம் வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து மேலும் கருத்துரைத்த அவர், வென்னப்பவ பிரதேச சபைத் தவிசாளர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, குறித்த வாராந்தச் சந்தைக் கட்டத்தை புனரமைக்க, நகரத் திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சராக இருந்த, ரவூப் ஹக்கீம் அவர்களே நிதி ஒதுக்கீடு செய்தார்.
சகல இன மக்களும் நன்மை பெற வேண்டும் என்ற நோக்கிலேயே, இந்த வாராந்தச் சந்தை அமைக்கப்பட்டது. இந்த விடயத்தை, இனவாதத்தையும், பயங்கரவாத்தையும் புறந்தள்ளி கருத வேண்டும்.
குருநாகல், ஹெட்டிபொல பகுதிகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்களில், இனவாதிகளால் தாக்கப்பட்டவர்கள் யார்? வீதிகளில் வடை விற்றவர்களும், சுயதொழில்களில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்களும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .