Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 09 , பி.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்நோக்க காத்திருந்த 5ஆம் வகுப்பு மாணவி ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பரீட்சைக்கு முன்னரான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்த சிறுமி, தனது தந்தையின் முச்சக்கர வண்டியில் பாட்டி மற்றும் அத்தையுடன் அம்பலங்கொடவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து மீண்டும் எல்பிட்டியவுக்கு திரும்பிய போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்பிட்டிய - பிட்டிகல வீதியில் முச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்து, பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
உடனடியாக எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி உயிரிழந்தார். R
37 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
39 minute ago