2025 ஜூன் 18, புதன்கிழமை

நாளை முதல் விசேட பஸ் சேவை

Editorial   / 2020 ஜூலை 30 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலை முன்னிட்டு நாளை (31) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இந்த விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,300 பஸ்கள் குறித்த நாள்களில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இதனை தவிர, மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து அதிகார சபையிடமுள்ள 600 பஸ்களும் இந்த ​சேவையில் ஈடுபடவுள்ளன.

இதற்காக தற்காலிக போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .