2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நாவலப்பிட்டியில் ரயில் விபத்து

Editorial   / 2019 ஜூலை 02 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே ரயிலில் இன்று (02) தாயும் மகளும் மோதுண்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பலத்த காயங்களுக்குள்ளான 27 வயதுடைய தாயும் 6 வயதுடைய சிறுமியும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக நாவலபிட்டி வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்து நாவலபிட்டி நகர ரயில் பாதையில் இடம்பெற்றதாகவும் ரயில் வரும் பொழுது தாயும் மகளும் ரயில் வீதியில் நின்று கொண்டிருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

காயங்களுக்குள்ளான தாயும் மகளும் கெட்டபுலா கடுங்சேன பகுதியை சேர்ந்தவர்கள் தெரியவந்துள்ளதுடன், இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .