2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

‘நீண்டகால அகதிகளின் பிரச்சினை விமோசனத்தைபெற்றுக்கொடுக்கத் தயார்’

Editorial   / 2019 ஏப்ரல் 03 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெயர்ந்து, நீண்டகால அகதிகளாக இன்னும் மீள் குடியேறாது அவதிப்படுபவர்களுக்கு விமோசனம் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தயாரிக்கவிருப்பதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, உரையாற்றிய போதே, அவர், மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.  

“தனது இந்த முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும்  உதவ வேண்டும்” எனப் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார்.

“மீள் குடியேறாத மக்களின் காணிப்பிரச்சினை, வீட்டுப்பிரச்சினை, மலசலகூடப் பிரச்சினை, குறித்த தரவுகளைச் சேகரித்து பட்டியலிட்டு இரண்டு வார  காலத்தினுள் தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன். அத்துடன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மாத்திரமின்றி  ஜம்மியத்துல் உலமா உட்பட சமூகம் சார்ந்த சிவில் அமைப்புகள், நிறுவனங்களும் இதற்கு  உதவ வேண்டும்“ என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X