2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நீராடச் சென்ற மூவர் பலி; ஒருவர் மாயம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை, பிட்டபெத்தர பகுதியிலுள்ள நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற போது காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவர், இன்று (27) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும் மண்ணெண்ணெய் மற்றும் ஒட்சிசன் பற்றாக்குறை காரணமாக தேடுதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பின்னர், கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பின்னரே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

22, 23, 24 வயதான இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், 24 வயதான இளைஞர் காணாமற் போயுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .