2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நீரிழ் மூழ்கி ஒருவர் மாயம்

Editorial   / 2018 டிசெம்பர் 25 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்பிலிப்பிட்டிய – வராகெட்டிஆர குளத்தில் குளிக்கச் சென்ற நபரொருவர் காணமால் போயுள்ள நிலையில்​ பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நேற்று (24) பிற்பகல்  குளிப்பதற்காகச் சென்றிருந்த குழுவொன்றுடன் குறித்த நபரும் சென்றிருந்ததாகவும், அவர்களில் சிறுமியொருவர் நீரில் மூழ்கிய போது, அவரை காப்பற்ற முயன்ற வேளையில், குறித்த நபர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 33 வயதுடையவரென்றும், இவரை ​​தேடும் பணிகளில் கடற்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .