2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

நுவரெலியாவில் கையெழுத்து இயக்கம்

Freelancer   / 2022 ஜனவரி 23 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்த ஒரு மாத கால கையெழுத்து இயக்கத்தின் நிறைவாக நுவரெலிய மாவட்டம் முழுவதும் பயணித்து மக்களிடம் சேகரிக்கும் பணியை 'நுவரெலியாவில் இருந்து நுவரெலியாவுக்கு'  எனும் பயணமாக நடாத்தவுள்ளதாக மலையக அரசியல் அரங்கம் அறிவித்துள்ளது. 

நுவரெலியா மாவட்ட செயலக அதிகரிப்பினை காலி மாவட்டத்துக்கு மாறுபட்ட விதத்தில் பாரபட்சமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிராகவும் நுவரெலியா மாவட்டத்தில் முழுமையான பிரதேச செயலகங்களை நடைமுறைப்படுத்தவும் கோரியே இந்த கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

மலையக அரசியல் அரங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பில் சனிக்கிழமை (22) நடாத்திய  ஊடக சந்திப்பிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 25 ஆம் திகதி நுவரெலியா நகரில் ஆரம்பிக்கும் கையெழுத்து பெற்ற கோவைகளைச் சேகரிக்கும் பயணம் வலப்பனை, ஹங்குராங்கத்தை, கொத்மலை, அம்பகமுவை ஆகிய பிரதேச செயலக எல்லைகளின் ஊடாகப் பயணித்து இறுதியாக 27ஆம் திகதி நுவரெலியா பிரதேச செயலக எல்லையை அடையவுள்ளது.

அன்று மாலை மாவட்ட செயலாளரிடம் பொது மக்கள் மனு கையளிக்கப்படும் என அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார். 

ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள நகரங்களில் தமது குழுவினரிடம் கையெழுத்து மனுவை பொதுமக்கள் கையளிக்கத்தக்கதாக தமது களச் செயற்பாட்டாளர்கள் ஊடாக ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

இத்தகைய  ஜனநாயக வழியில் எமது கோரிக்கையை மாவட்ட செயலாளர் ஊடாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், பிரதமர் , ஜனாதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாதவிடத்து மலையக அரசியல் அரங்கம் சார்பாக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கினை தொடர்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். 

இந்த ஊட்ட சந்திப்பில் பிரதான அமைப்பாளர் செந்தூரன் , செயலாளர் கிருஷ்ணகுமார், உயர்பீட உறுப்பினர் வினோத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X