2026 மே 05, செவ்வாய்க்கிழமை

நேற்று பதிவானோரின் தகவல்

Editorial   / 2020 ஜூன் 10 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பின்னர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இருவர் நேற்று (09) பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1859 ஆக அதிகரித்துள்ளதாக இப்பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றாளர்களாக பதிவான இருவரில் ஒருவர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் மற்றைய நபர் கடற்படையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 1057 பேர் பூரண குணமடைந்துள்ளனர். மேலும் 791 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இதுவரை 866 கடற்படையினர் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் 563 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியோரில் 595 இதுவரை தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .