Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை
Janu / 2025 ஜூன் 03 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளியாப்பிட்டி, தொழில்நுட்ப கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவி ஒருவர், பகிடிவதையை தாங்க முடியாமல், கல்லூரிக்கு அருகில் உள்ள வாவியில் குதித்துள்ளதுடன், பிரதேசவாசிகளால் அவர் மீட்கப்பட்டு குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவியின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவியை பகிடிவதை செய்ததாகக் கூறப்படும் மூன்று மாணவர்கள் மற்றும் , ஒரு மாணவி வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
குளியாப்பிட்டி தொழில்நுட்ப கல்லூரியில் இது வரை இவ்வாறான சம்பவங்கள் பதிவானதில்லை எனவும் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவி வாவியில் குதிப்பதற்கு முன்பு தொழில்நுட்ப கல்லூரியின் ஆசிரியரொருவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
9 hours ago
9 hours ago