Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 29 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ரயில்வே ஊழியர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என, ரயில்வே திணக்களம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவையாக ரயில் சேவை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ரயில்வே ஊழியர்கள் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்படும் என்றும் உரிய நேரத்தில் வேலைக்கு சமூகமளிக்காமை, தாமதமாக பயணிக்கும் ரயில்கள் தொடர்பிலும் இன்று முதல் கவனம் செலுத்தப்படும் என்று, ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
ரயில்வே சேவையின் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பில் அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்ட பத்திரம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமையால், பிரதி வியாழக்கிழமைகளில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம், நேற்று முன்தினம் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
22 Jun 2025