2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

’பட்டதாரிகளுக்கு இராணுவ பயிற்சி வேண்டாம்’

Editorial   / 2020 செப்டெம்பர் 05 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் அரச தொழிலுக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கும் தென்னே ஞானாநந்த தேரர், அவர்களுக்கு வழங்கப்படும் இராணுவப் பயிற்சிக்கு மாறாக முறையாக அரச நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாக பயிற்சிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார். 

அத்தோடு, இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்ட  பட்டதாரிகளுக்கு 5 படிமுறைகளில்  பயிற்சிகள் வழங்கப்பட உள்ள​தோடு, அவற்றி முதல் பயிற்சி முழுமையான இராணுவ பயிற்சியெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, பட்டதாரிகளை இராணுவ முகாம்களுக்குள் முடக்கிவைப்பதால் அரசாங்கம் எவ்வாறான பலன்களை எதிர்பார்க்கிறது என வினவின அவர்,  பட்டதாரிகளும் இந்த பயிற்சி தொடர்பில் மீள் பரிசீலனை ஒன்று அவசியமெனவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .