2026 மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை

பாதுகாப்பு அமைச்சரின் சகோதரர் விபத்தில் பலி

Janu   / 2026 மார்ச் 15 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதெனிய - அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற வீதி விபத்தில், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழந்துள்ளதாக கல்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹாஇலுப்பள்ளம பகுதியைச் சேர்ந்த கே.எஸ்.எம். பியசேன திசாநாயக்க என்பவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மஹகல்கடவல பகுதியில் வசிக்கும் தனது இளைய சகோதரரின் இல்லத்தில் நடைபெற்ற ஒரு விசேட நிகழ்வில் கலந்துகொண்டு விட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது இல்லத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மஹகல்கடவல வளைவு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X