Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 25 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை நகரில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இருவர் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட அன்று, குறித்த சந்தேகநபர்கள் இருவரும் பதுளை நகரில் நடமாடியுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இவர்களைக் கண்டறிவது தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள், 071-8591511, 055-2222226 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தகவல்களை வழங்குமாறு பதுளை பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோஹன வனிகசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 Jun 2025
27 Jun 2025
27 Jun 2025