2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’பயங்கரவாதத்தை உடனடியாக இல்லாதொழிக்க முடியாது’

Editorial   / 2019 மே 11 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாதத்தை, உடனடியாக இல்லதொழிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு பலப்படுத்தப்படும் வரை, பாடசாலைகளை திறக்காமல் இருப்பதே, சிறப்பானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.​

கொழும்பில், நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

பயங்கரவாதத்தை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது என்பது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் ஆனால், இது சில அரசியல்வாதிகளுக்குத் தெயவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எவரும் சட்டத்தைக் கையிலெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு, யுத்த காலத்தில் செயற்பட்டதைப் போல செயற்படுவதாகத் தான் கருதவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .