2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பற்சிகிச்சைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிச் செல்வதன் காரணமாக, பொதுமக்களின் நலன் கருதி நாடு பூராகவுமுள்ள பற்சிகிச்சை நிலையங்களில் முன்னெடுக்கப்படும் பற்சிகிச்சைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை பற்சிகிச்சை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வலி, வீக்கம் உள்ளிட்ட நோய்களுடன் வரும் நோயாளர்கள்,  பற்கள் தொடர்பான திடீர் நோய்களுக்காக வருபவர்களுக்கு தேவையான சிகிச்சை என்பன உரியமுறையில் முன்னெடுக்கப்படுமென, அச்சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் பல் நிரப்புதல், சுத்தப்படுத்தல், பற்களை பிடுங்குதல், சிறுவர்களுக்கான சிகிச்சைகள் என்பவற்றை​யே மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பற்சிகிச்சை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .