2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

பஸ்களில் வியாபாரத்தை நிறுத்த நடவடிக்கை

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் தண்ணீர் உள்ளிட்ட திரவங்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில், போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பஸ்களில் விற்பனையில் ஈடுபடுவோர் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் செயற்படுவதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் முதல் ரயில்களுக்குள் விற்பனை நடவடிக்கைகளுக்கு ரயில்வே திணைக்களத்தினால்  தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .