2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பஸ் கட்டணம் அதிகரிக்கும்?

Editorial   / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், எதிர்வரும் 10ஆம் திகதி, ஒரு லீற்றர் டீசலின் விலை அதிகரிக்கப்படுமாயின், பஸ் கட்டணங்களும் அதற்கு அடுத்தநாள் அதிகரிக்கப்படுமென, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

ஆகக் குறைந்த கட்டணமான 12 ரூபாயில் எவ்விதமான மாற்றங்களும் இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை என, அந்தச் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், சூத்திரத்தின் பிரகாரம் இம்முறையும் விலை அதிகரிக்கப்படுமாயின், கட்டணங்கள் கட்டாயமாக உயருமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X