2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பஸ் விபத்தில் 38 பேர் காயம்

Editorial   / 2019 ஜூன் 27 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெலன்பிட்டியவிலிருந்து யட்டியந்தோட்டை நோக்கி பயணித்த பஸ்ஸொன்று  வீஓயா தோட்ட ஆலயத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதில், 38 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டுள்ளனர்.

அவிசாவளை டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டியே இன்று காலை வீதியை விட்டு விலகி, 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களுள் 4 பாடசாலை மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் உள்ளடங்குவதாகவும், இவர்கள்  கரவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இவ்விபத்தால் எவருக்கும் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .