2025 ஜூன் 09, திங்கட்கிழமை

’ பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் அப்பா’

Freelancer   / 2022 மே 10 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதமரும் தனது தந்தையாரும் ஆகிய மஹிந்த ராஜபக்ஷ, நாட்டை விட்டு எங்கும் செல்லமாட்டார் என்று அவருடைய மகனும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (10) தெரிவித்தார்.

சர்வதேச ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  நாமல் எம்.பி மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.

"நாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் பரவுகின்றன, நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்" என்று அவர் குறிப்பிட்டார்.

தனது தந்தை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார் எனவும் அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறார் என்றும் தெரிவித்தார்.

இலங்கையர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு என்று தனது குடும்பத்தினர் நம்புவதாகவும் தாங்கள் எப்போதும் எமது மக்களுக்கு ஆதரவாக நிற்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5