Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 11 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.கமல்
காட்போட் வீரர்களுக்கும் இராணுவத்தினரை கூலி வேலைகளுக்கும் ஈடுபடுத்தியவர்களை, மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு இடமளிக்கவேண்டுமா தன்னுடைய உதிரத்தையையும் சதையையும் அர்ப்பணித்தவருக்கு பதவி வழங்கவேண்டுமா எனக் கேள்வியெழுப்பிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, தன்னுடைய ஆட்சியில், பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை, பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பேன் என்றார்.
புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது பிரசாரக் கூட்டம், காலி முகத்திடலில் நேற்று (10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாட்டின் பாதுகாப்பா, ஒரு குடும்பத்தின் பாதுகாப்பா என்பதை யோசியுங்கள். குடும்ப – இராணுவ – அடிமை ஆட்சி அவசியம் இல்லை. பொதுமக்களின் சக்தியே வென்றென்டுக்கப்படவேண்டும் என்றார்.
“நாட்டின் ஒழுங்குப்பத்திரத்தை ஒரு குடும்பம் தீர்மானித்து விட முடியாது. நாம் அமைக்கும் புதிய ஆட்சியில் திருட்டு மோசடிகளுக்கு இடமளிக்க மாட்டோம்” என்றும் கூறினார்.
“நாட்டின் இறையாண்மை பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துவோம். நாங்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல. நாங்கள் நாட்டின் தற்காலிக பாதுகாவலர்கள். இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை நாங்கள் சிறந்ததாக மாற்றியமைப்போம். பெண்களின் எதிர்காலத்தை நல்லபடியாக மாற்றி அவர்களை பாதுகாக்க நாங்கள் கொள்கை வகுப்போம். விவசாயக் கொள்கை, தொழிலாளர் கொள்கை வகுப்போம்” என்றார்.
“எமது ஆட்சியில் எந்த அரசியல்வாதிகளுக்கும் ஜம்பர் அணிவிக்க மாட்டோம். அது நீதிமன்றம் செய்யும். ஆனால் பயங்கரவாதத்தை நாங்கள் இல்லாமலாக்குவோம். போதைப்பொருள் ஒழிப்பை நாங்கள் மேற்கொள்வோம். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு உயரிய தண்டனை வழங்குவோம்” என்றார். (படப்பிடிப்பு; பிரதீப்பத்திரண)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
9 hours ago