2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பாராளுமன்றத்துக்கு CID விஜயம்

Freelancer   / 2024 டிசெம்பர் 21 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, சம்பந்தப்பட்ட பாராளுமன்ற அதிகாரிகளிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதற்காக அந்த துறையின் சிறப்பு அதிகாரிகள் குழு நேற்று பாராளுமன்றத்துக்கு வருகைதந்தது.

இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மூன்று பாராளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

அந்தத் தகவல்கள் இணையத்தளத்தில் இடம்பெற்றமைக்கு அடிப்படையாகக் கூறப்படும் பல கடிதங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் பாராளுமன்ற அதிகாரிகள் கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயருக்கு முன்னால் வைத்திய கலாநிதி என்ற பட்டத்தை குறிப்பிட்டு தனக்கு அவதூறு ஏற்படுத்தியதாக சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன்படி, சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.AN



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5