2025 ஜூன் 25, புதன்கிழமை

பாரியக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் பூஸா சிறைக்கு மாற்றம்

Editorial   / 2019 மே 26 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாளக்குழு மற்றும் போதைப் பொருளுடன் தொடர்புடையக் குற்றச்சாட்டில் மரணத் தண்டணை, ஆயுட்கால தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளும் பூஸா சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய 13 கைதிகள் நேற்றைய தினம் வெலிக்கடை, மஹர சிறைச்சாலைகளிலிருந்து பூஸாவுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் குறித்த கைதிகளை பலத்த பாதுகாப்பின் மத்தியில் சிறைவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி, நீதியமைச்சரின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இடமாற்றப்பட்ட கைதிகளுள் சூசை, குடு சியாம் மற்றும் வெலே சுதாவின் சகவான கௌதன் உள்ளிட்ட பிரபல கைதிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் எதிர்வரும் நாள்களில் மேலும் பல கைதிகள் இவ்வாறு இடமாற்றப்படவுள்ளதாகவும்  இதற்காக 15 விசேட சிறைக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .