2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பிரதமராகப் பதவியேற்றார் மஹிந்த

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , பி.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அடுத்த பிரதமராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, சற்று முன்னர் பதவியேற்றார். அவருக்கான பதவியேற்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மேற்கொண்டார்.

இலங்கையின் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான முடிவை, ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எடுத்து, அது தொடர்பான அறிவிப்பை, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கியுள்ளது என்ற தகவலை, அமைச்சர் மஹிந்த அமரவீர வெளிப்படுத்திய பின்னர், இப்பதவியேற்புத் தொடர்பான தகவலும் வெளியானது.

எனினும், இப்பதவியேற்பு, சட்டத்துக்கும் அரசமைப்புக்கும் உட்பட்டதா என்பது தொடர்பில், தொடர்ந்தும் சந்தேகங்கள் நிலவுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .