2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பிரதமர் ரணில் நாட்டை வழமைக்கு கொண்டுவருவார்

Freelancer   / 2022 மே 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 26 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ். ஆனந்தகுமார் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண பலம்வாய்ந்த மற்றும் சர்வதேச ரீதியாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவர் ஒருவர் அவசியமாகும். இன்றைய சூழலில் அதற்கு பொருத்தமான நபராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார் என்பதை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
 
2015 ஆம் ஆண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்தான் மீண்டும் நாட்டை அவர் பெறுப்பேற்றார். அந்த சவால்களை வெற்றிக்கொண்டு நாட்டை வழமைக்கு கொண்டுவந்தார்.

மீண்டும் இக்கட்டான ஒரு சூழலில்தான் 6 ஆவது தடவையாக அவர் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்த சவால்களையும் வெற்றிக்கொண்டு நாட்டை வழமைக்கு கொண்டுவருவார். மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமைகளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் குறைக்கும் ஆளுமை அவரிடம் உள்ளது என்று எஸ். ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7