2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்தது; நீர் மின்னுற்பத்திக்கு சவால்

Editorial   / 2019 மே 15 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர் மின்னுற்பத்தி செய்யப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மேலும் குறைவடைந்து வருவதாக, மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நீர் மின்னுற்பத்தி குறைவடைந்துள்ளதாக, அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

எனினும், நீர் மின்னுற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் எதிர்வரும் நாள்களில் மழைவீழ்ச்சி பதிவாகுமென, வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்ட போதிலும், எதிர்பார்த்த மழை வீழ்ச்சி பதிவாகாவிடில், நீர் மின்னுற்பத்தியில் பாரிய சவால்களை எதிர்​கொள்ள நேரிடுமென்று சுலக்ஷன மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .