Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Freelancer / 2022 மே 03 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதி சபாநாயகரின் இராஜினாமா கடிதம் தொடர்பாக ஜனாதிபதி இதுவரை எந்த அறிவிப்பையும் விடுக்காததால் பாராளுமன்றத்தில் வெற்றிடமாகி இருக்கும் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒருவரை நியமிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகராக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய ஏப்ரல் 30 ஆம் திகதியில் இருந்து தனது பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்ததுடன் அதுதொடர்பான ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் ரன்ஜித் சியம்பலாபிடியவின் ராஜினாமா கடிதம் தொடர்பாக ஜனாதிபதி இதுவரை சபாநாயகருக்கு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago