2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பிரதி பொலிஸ் மா அதிபரை தாக்கியவர்கள் விளக்கமறியலில்

R.Maheshwary   / 2022 மே 11 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை தாக்கியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ஷிலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சந்தேகநபர்களை நாளை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

குறித்த சந்தேகநபரை கண்காணித்த பின்னர், அவர் தொடர்பிலான உத்தரவைப் பிறப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

9 hours ago - 0     - 9

‘படை தலைவன்’

9 hours ago - 0     - 9

மன்னிப்பு

9 hours ago - 0     - 8

‘மெஜந்தா’

9 hours ago - 0     - 7