Editorial / 2026 ஜனவரி 18 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (16) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.
இந்த சம்பவம், புகுடு கண்ணா மற்றும் பழனி ஷிரான் ஆகிய இரு பாதாள உலகக் கோஷ்டியினருக்கு இடையிலான மோதலாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் புகுடு கண்ணா தரப்பைச் சேர்ந்த கொணிஸ்டன் என்ற ஜேசுநேசன் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின்பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான துப்பாக்கிதாரி முஸ்லிம் அணியும் அபாய உடையும் மற்றைய நபர், முகத்தை மறைத்து தொப்பி அணி வந்துள்ளார். இருவரும் கணவன், மனைவியைப் போலவே வந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026