Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 18 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய முகங்களை இணைத்துக்கொள்ள முயற்சித்ததாலேயே பலரும் தன்னுடன் முரண்பட ஆரம்பித்தனர் எனத் தெரிவிக்கும் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங், அடுத்த தலைமுறைக்கு கட்சியின் பொறுப்புகளை கையளிக்க இடமளித்தால் மாத்திரமே தன்னாள் விலக முடியுமெனவும் தெரிவித்தார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
இன்னும் ஐந்து வருடங்கள் இவ்வாறே பயணிப்பதா இல்லை ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவதாக என்பதை தீர்மானிக்க வேண்டுமா என்றார்.
தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்வைத்த திட்டங்கள் தொடர்பாக தற்போது கதைப்பது கூட இல்லையென தெரிவித்த அவர், ஐக்கிய தேசிய கட்சியால் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை செய்ய முடியுமெனவும் தெரிவித்தார்.
அதேபோல், விவசாயிகளின் காணி உரிமைப்பத்திரங்களை கையளிப்பதற்கான சட்டத்திருத்தத்தை செய்து, காணி உரிமைகளை பெற்றுக்கொடுப்பதோடு, சகல விதமான உர வகைகளையும் இறக்குமதி செய்வதற்கான அனுமதியும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்.
பொலன்னறுவை தொடக்கம் அம்பாறை வரையான பகுதிகளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களே அபிவிருத்தி செய்தனர் எனத் தெரிவித்த அவர், நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளை ஐக்கிய தேசிய கட்சியே அறிந்துகொண்டுள்ளதெனவும் தெரிவித்தார்.
அதனால் தனக்கு ஐக்கிய தேசிய கட்சியில் புதிய முகங்களை இணைத்துகொள்வது அவசியமென தெரிவித்த அவர், அதனை பற்றி பேசியதாலேயே தன்னோடு பலரும் முரண்பட ஆரம்பித்தனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
44 minute ago
59 minute ago
3 hours ago