2025 ஜூன் 25, புதன்கிழமை

‘புலனாய்வுத் தகவல்களை அம்பலப்படுத்துவது தவறு’

Editorial   / 2019 மே 31 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். ஷிவானி  

நாட்டின் புலனாய்வுத்துறையின் தகவல்களை பகிரங்கமாக வெளியிடுவது உசிதமானதல்ல எனவும், இச் செயற்பாடானது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர, உலகில் எந்த நாடும் மேற்கொள்ளாத செயற்பாட்டையே, தற்போதைய அரசாங்கம் செய்துவருவதாக சாடினார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் மெற்கண்டவாறு தெரிவித்தார்.  

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர்,  

புலனாய்வுத் துறையின் இரகசியங்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். இன்று புலனாய்வுத் தகவல்களை பகிரங்கமாக வெளியிடுவதால், நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்வி்க்குறியாகியுள்ளது. நாட்டு மக்கள் மாத்திரமல்லாமல் சர்வதேசத்தினரும், எமது நாட்டின் புலனாய்வுத் தகவல்களை இதன்மூலம் அறிந்துகொள்கின்றனர். இது மிகவும் பாரதூரமான செயற்பாடு. எனவே, இதனை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றார்.   

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அரசாங்கத் தரப்பினர் மாத்திரமே உள்ளனர். எதிரணியினர் எவரும் அதில் அங்கம் வகிக்கவில்லை. எனவே, நாட்டுக்கோ அல்லது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கோ இதன்மூலம் ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்படுமாயின், அதற்கான முழு பொறுப்பையும் ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்க வேண்டும் என்றார்.  

குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களும், இத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர் ஆகவே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற ரீதியில் நாம் இதில் பங்கேற்கவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பை பாதுகாத்திடும் வகையில், நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் அமைய வேண்டும்.   
அவ்வாறின்றி, புலனாய்வுக்கு தகவல்களை வழங்கியவர் யார் என்பது தொடர்பான தகவல்களை வெளியிடுவதும், புலனாய்வுப் பரிவினர் பயன்படுத்தும் இரசகிய வார்தைகளை (ஐய் ஒன்லி) பகிரங்கப்படுத்துவம் ஆபத்தான விடயமாகும் என்றார்.  

எனவே, பொறுப்புவாய்ந்த வகையில். இதன் செயற்பாடுக்ள முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர், இதன் பின்னர் புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்புப் பரிவினர் எத்தகைய சவால்களை எதிர்நோக்கினாலும், அதற்கான முழு பொறுப்பை விசாரணைக் குழுவினரே ஏற்க வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .