2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

’புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்’

Editorial   / 2020 செப்டெம்பர் 11 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆளுங், எதிர்க்கட்சி ஆசனங்களிலும் அமர்ந்திருந்தார் எனத் தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே தொண்டமான் கொண்டிருந்தார் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ள அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், 

 “அவரது திடீர் மறைவு எமது நாட்டு மக்களுக்கும் ஒரு துயமரான சம்பவம். அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆளுங், எதிர்க்கட்சி ஆசனங்களிலும் அமர்ந்திருக்கிறார். அவர் நாட்டின் அனைத்து இன, மத மக்களுக்கும் எந்தவிதமானப் பாரப்பட்சமின்றி சேவை செய்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளிக்கு எதிரான ஸ்தீரமான நிலைபாட்டில் அவர் இருந்தார். 

“பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நுவரெலியா மாவட்ட உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் அவர் சிறந்த சேவைகளை செய்திருந்தார்.  தமிழ், சிங்கள, ஆங்கில மொழியில் அவருக்கு சரளமாக உரையாட முடியும். தொண்டமானின் சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க அவரது புதல்வரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் எங்களோடு இணைந்திருக்கிறார்” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .