2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

பெண்ணிடம் கைவரிசை யாழில் மூவர் கைது

Editorial   / 2020 ஜூலை 17 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

தனிமையில் வசித்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்த மூவர், வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 8ஆம் திகதி பட்டப்பகலில் இடம்பெற்றது. 

சந்தேக நபர்கள் மூவரில் இருவர், புன்னாலைக்கட்டுவன் அன்னமார் கோவிலடியிலும் ஒருவர் ஏழாலையிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகேஸ்வரி (78) என்ற வயோதிப் பெண்ணின் வீட்டுக்குள் கடந்த 8ஆம் திகதி மதியம் முகங்களை மூடியவாறு 3 பேர் நுழைந்துள்ளனர். 

அவரின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகையும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பித்தனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் குறித்த பெண்ணால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அண்மையாகவுள்ள சிசிரிவி வீடியோ பதிவுகளின் ஆதாரங்களைக் கொண்டு சந்தேக நபர்கள்  3 பேரையும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் அடையாளம் கண்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர், ஏழாலையைச் சேர்ந்தவர். மற்றைய இருவரும் புன்னாலைக்கட்டுவன் அன்னமார் கோவிலடியைச் சேர்ந்தவர்கள். 
கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .