Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 11 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு, பெருந்தோட்ட மக்களுக்கும் தனிப்பட்ட வகையில் தனக்கு பாரிய இழப்பு எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தொண்டமானின் வழியில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் செயற்படுவாரெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு, அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கான அனுதாபப் பிரேரணையை முன்வைத்து நாடாளுமன்றில் உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“தொண்டமான் இறப்பதற்கு முன்னர் என்னை வந்து சந்தித்திருந்தார். அப்போதும் அவர் பெருந்தோட்ட மக்கள் தொடர்பிலேயே என்னோடு உரையாடியிருந்தார். சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவைத் தொடர்ந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்ட அமரர் ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்காத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 3 இலட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளி மக்களுக்கு அவர் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்.
“பிரிவினைவாதிகளுக்கு எப்போதும் தொண்டமான் எதிராகச் செயற்பட்டிருந்ததோடு, பயங்கவராதிகளை ஒழிப்பதற்கும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். அமைச்சுப் பதவிகளை அவர் ஏற்றுக்கொண்டிருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர் பெருந்தோட்ட மக்களுக்காக சேவை செய்திருந்தார். வைத்தியசாலை, பெருந்தெருக்கல், பாடசாலைகளை பெருந்தோட்ட மக்களுக்கும் கொண்டு சென்றார். அவர் நாட்டை நேசித்ததோடு, எனது நம்பிக்கைக்குரிய நண்பர். அவரின் வழியில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயற்படுவாரென நம்புகிறேன். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago