2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பொதுபல சேனா அமைப்பால் வெளிப்படுத்தப்பட்டுள்ள பெண்ணொருவரின் அவலம்

Editorial   / 2019 ஜூலை 03 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கள இளைஞரொருவரை திருமணம் முடித்த முஸ்லிம் பெண்ணொருவர் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து, பொதுபல சேனா அமைப்பால் வெளிபடுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புக்கு குறித்த பெண் அழைத்து வரப்பட்டிருந்ததுடன், இதன்போதே, இந்தப் பெண் தனக்கு நேர்ந்த விடயங்கள் குறித்து, வெளிப்படுத்தியுள்ளார்.

2008ஆம் ஆண்டு தான் சிங்கள இ​ளைஞரொருவரை  திருமணம் முடித்த பின்னர், பண்டாரகம- அட்டளுகம பிரதேசத்தின் மாராவ பிரதேச முஸ்லிம் மக்களால்  தொடர்ந்து பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டும் இதுவரை எவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இப்பெண் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .