Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கொழும்பின் பல பகுதிகள் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக்குழு, பொதுமக்கள், நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளவுள்ளது.
அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை, இந்த விசாரணைக் குழுவுக்கு கருத்துகள், தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான தகவல்களை வழங்க விரும்புவோர், 0112 100 445 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது 0112 100 446 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடாகவோ தெரிவிக்க முடியும்.
அத்தோடு, கடிதம் மூலம் தகவல்களை வழங்க விரும்புவோர், செயலாளர், 21.04.2019 நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட விசாரணைக் குழு, தபால் பெட்டி இலக்கம் 2306, கொழும்பு 01 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
27 Jun 2025