2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 2 இலட்சம் ரூபாயை  இலஞ்சமாக வழங்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருக்க, இலஞ்சம் வழங்க முற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணை பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்தார்.

தமது சகோதரரை குறித்த வழக்கிலிருந்து காப்பாற்றுவதற்காக குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .