2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் 331 பேர் கைது

Editorial   / 2020 ஜூலை 14 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 331 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (13) பிற்பகல் 06 மணிமுதல் இன்று (14) அதிகாலை 05 மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் அதிகளவான சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 135ஆகும்.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 92 பேரும் கஞ்சா வைத்திருந்த 72 பேரும் கோடா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 16 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .