2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பொலிஸாரை சாடிய மொட்டு எம்.பிக்கள்

Freelancer   / 2022 மே 14 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் தீ வைப்புச் சம்பவங்கள் மற்றும் சொத்து அழிவை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்கள் குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (14) கூடிய போது இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு பொலிஸ்மா அதிபரும் அழைக்கப்பட்டிருந்த நிலையில் எம்.பி.க்கள் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீ வைப்பு மற்றும் வாகனங்களுக்கு சேதம் விளைவிப்பதை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7