2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்கும் ‘மரணத் தண்டனை வழங்கப்பட வேண்டும்’

Editorial   / 2020 ஜூலை 13 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப் பொருள் வர்த்தக​ர்களுக்கு எதிராக மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்படுமாயின், பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளும் இக்குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கும் மரணத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (12) அங்குணகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போ​தே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்,

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரணத் தண்டனை வழங்கினால் பரவாயில்லை. நாட்டின் எதிர்காலத்தை  அழிக்கும் போதை வர்த்தகர்களைக் கைதுசெய்யவே பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் நியமிக்கப்பட்டனரே தவிர, போதை வர்த்தகத்தை முன்னெடுக்க அல்ல என்றார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .