Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 07 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளக்கமறியல் வைக்கப்படும் கைதிகளைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்காக, கண்டி-பழைய போகம்பறை சிறைச்சாலை கட்டடத்தை தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு, மத்திய மாகாணத்திலுள்ள சிறைச்சாலைக்கு அனுப்பவேண்டிய கைதிகளை, முதலில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுவரையிலும் 500க்கும் அண்மித்த கைதிகள், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது.
போகம்பறை சிறைச்சாலை கட்டடம், கண்டி நகரத்தின் முக்கிய வரலாற்று கட்டடங்களில் ஒன்றாக மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த சிறைச்சாலை, பல்லேகலைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“பல்வேறு குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் நபர்கள் 21 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர்” என சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
பூசா மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளிலேயே தற்போது கைதிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் எனத் தெரிவித்த அவர், அவ்வாறு தனிமைப்படுத்தப்படும் கைதிகள், 21 நாள்களின் பின்னர் நீதிமன்றம் உத்தரவின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்படவுள்ளனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
19 Jun 2025
19 Jun 2025