2025 ஜூன் 18, புதன்கிழமை

போதைப்பொருள் வர்த்தகம்: 13 அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் மறியல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும், ஓகஸ்ட் 18ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.

இதன்​போது, சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் முன்வைத்த பிணை மறு கோரிக்கையை, பிரதான நீதவான் நிராகரித்தார்.

வழக்கு விசாரணைகளின் போது, சந்தேக நபர்கள் மன்றில் ஆஜராகவில்லை.

சந்தேக நபர்கள் அங்குனகொலபெலஸ்ஸ  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கொவிட் தொற்றுநோய் காரணமாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படமாட்டார்கள் என்றும், சிறைச்சாலை கண்காணிப்பாளர் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

ஹெரோய்ன் மோசடியில் சந்தேக நபர்கள் எவ்வாறு ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் அடங்கிய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று, துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .