Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2020 மார்ச் 26 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தற்போதைய நிலையில் அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் பற்றி போலிப் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சமூக ஊடக செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் மக்களுக்காக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் வேளையில் போலித் தகவல்களை சமூகமயப்படுத்த முயன்று வருவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன.
எந்தவித வேறுபாடும் இன்றி அனைவரும் இந்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில், அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்ள சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள் கவலைக்கிடமானதாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
13 Jul 2025
13 Jul 2025
13 Jul 2025