2025 ஜூன் 09, திங்கட்கிழமை

புதிய கட்டளைத் தளபதிக்கு பொலிஸ் மா அதிபர் ஒப்புதல்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை நியமிக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஒப்புதல் அளித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படைக் கட்டளைத் தளபதியை நியமிப்பது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர், இழுத்தடிப்பு செய்து வந்த நிலையிலேயே, இன்று வியாழக்கிழமை (18) அதற்கான ஒப்புதலை அவர் வழங்கியுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை, பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு அண்மையில் பரிந்துரை செய்திருந்தது.  

கடந்த 09ஆம் திகதி முதல் இந்த நியமனம் வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும் பொலிஸ் மா அதிபரினால் அதற்கான அங்கிகாரம் வழங்கப்படாதிருந்து வந்தது.

இந்நிலையில், இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் பொலிஸ் ஆணைக்குழு விளக்கம் கோரியிருந்தது.

1979ஆம் ஆண்டு, உப பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்த எம்.ஆர்.லத்தீப், இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் மிக நீண்ட அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

6 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

6 hours ago - 0     - 6

மன்னிப்பு

6 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

6 hours ago - 0     - 5